cOmEcar mutumozi veNpA
of civanjAna munivar
(in tamil script, unicode format )
சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர்: சிவஞான முனிவர் )
சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர் : சிவஞான முனிவர்)
அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி நூல்
காப்பு
மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்கடம்பொழி முக்கட் களிறு.1. கடவுள் வாழ்த்து
சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு2. வான்சிறப்பு
நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.3. நீத்தார் பெருமை
அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
4. அறன்வலியுறுத்தல்
தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்.5. இல்வாழ்க்கை
இல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்லஇயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாரு ளெல்லாந் தலை.
6. வாழ்கைத்துணை நலம்
மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்தூய அனுசுயை சோமேசா - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.7. புதல்வரைபெறுதல்
பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்
தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லா மினிது.8. அன்புடைமை
தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்துதோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்புன்கணீர் பூசல் தரும்.9. விருந்தோம்பல்
பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுத லின்று.10. இனிவை கூறல்
இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்
துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடையஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோவன்சொல் வழங்கு வது.
11. செய்நன்றி அறிதல்
பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்கொள்வர் பயன்தெரி வார்.12. நடுவு நிலைமை
வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.13. அடக்கமுடைமை
எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.14. ஓழுக்கமுடைமை
தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்15. பிறனில் விழையாமை
ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்றபகைபாவ மச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
16. பொறையுடைமை
ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்குபொன்றுந் துணையும் புகழ்.17. அழுக்காறாமை
அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்வழுக்கியுங் கேடீன் பது.18. வெஃகாமை
நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறைதுன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்குற்றமு மாங்கே தரும்.19. புறங்கூறாமை
கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளேதூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தோறா தவர்.20. பயனில சொல்லாமை
சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவேதுக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.
21. தீவினையச்சம்
குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.22. ஒப்புரவறிதல்
பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மைசெய்யா தமைகலா வாறு.23. ஈகை
மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்
தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.24. புகழ்
போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்ஈத லிசைபட வாழ்த லதுவல்லது
ஊதிய மில்லை யுயிர்க்கு.25. அருளுடைமை
மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்
சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்தபொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்அற்றார்மற் றாத லரிது.
26. புலால் மறுத்தல்
மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்எங்ஙனம் ஆளும் அருள்.27. தவம்
ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.
28. கூடாவொழுக்கம்
மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்திதூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.29. கள்ளாமை
நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்கள்ளமை காக்கதன் நெஞ்சு.30. வாய்மை
பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு
துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.
31. வெகுளாமை
பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.32. இன்னா செய்யாமை
பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னாபிற்பகற் றாமே வரும்.33. கொல்லாமை
வேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீங்கும் வினை.34.நிலையாமை
ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்புல்லறி வாண்மை கடை.35. துறவு
கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்
தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமைமயலாகு மற்றும் பெயர்த்து.
36.மெய்யுணர்தல்
காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்நாமங் கெடக்கெடு நோய்.37. அவாவறுத்தல்
தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
38. ஊழ்
முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடை.39.இறைமாட்சி
பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ் தங்கு முலகு.
40. கல்வி
சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்பதும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.
41. கல்லாமை
மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.42. கேள்வி
ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே
தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்குஒற்கத்தி னூற்றாந் துணை.
43. அறிவுடைமை
அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்
அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவதுஅஞ்ச லறிவார் தொழில்.44. குற்றங்கடிதல்
ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.
45. பெரியோரைத் துணைகோடல்
எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரேசுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.46. சிற்றினஞ் சேராமை
அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.47.தெரிந்து செயல்வகை
சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனேதூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.48. வலியறிதல்
சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.49. காலமறிதல்
வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொருதூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றேஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.50. இடனறிதல்
காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கட் போற்றிச் செயின்.
51. தெரிந்து தௌிதல்
தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறைதீரா விடும்பை தரும்.52. தெரிந்து வினையாடல்
தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகு மாந்தர் பலர்.53. சுற்றந்தழால்
ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்
சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரேஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.
54. பொச்சாவாமை
முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரேதுப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.55. செங்கோன்மை
மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.56. கொடுங்கோன்மை
ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.
57. வெருவந்த செய்யாமை
வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்நீடின்றி யாங்கே கெடும்.58. கண்ணேட்டம்
மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.59. ஓற்றாடல்
வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் றொழில்.60. ஊக்கமுடைமை
வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
61. மடியின்மை
பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னிதொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.62. ஆள்வினையுடைமை
கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரேதோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.63. இடுக்கண்ணழியாமை
என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்